Type Here to Get Search Results !

கடவுள் பெயரை குழந்தைக்கு சூட்டலாமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

     ஓம் சிவசக்தி

நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்களும் - குழந்தைக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டு அந்த வேண்டுதலை நிறைவேற்ற அந்த குழந்தைக்கு அந்த கடவுளின் பெயரை சூட்டுபவர்களும் உண்டு .  

கடவுள் பெயரை வைத்துக்கொண்டவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களின் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு இல்லை . 

ஒரு சிலர் தன் குல தெய்வ பெயரை கூட தன் குழந்தைக்கு சூட்டுவார்கள் .   அப்படி ஒரு குழந்தைக்கு தன் இஷ்ட கடவுளின் பெயரை சூட்டுவது தப்பல்ல . ஆனால் அப்படி சூட்டும் -  அந்த கடவுளுக்கு ஆதிபத்தியம் வகிக்கும் கிரகம் அந்த குழந்தையின் ஜாதகத்தில் வலிமையுடன் இருந்தால் அந்த குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் அந்த பெயரால் அந்த குழந்தையின் குடும்பமும் ஒரு சில வழிகளில் முன்னேற்றத்தை காணும் .

ஒரு பிறந்த பெண் குழந்தைக்கு லஷ்மி - தனம் - தனலட்சுமி - மகாலஷ்மி - ஐஸ்வர்யா - யோகலட்சுமி - கோகுல லக்ஷ்மி - பாக்கிய லக்ஷ்மி - முத்து லக்ஷ்மி - போன்ற பெயரை சூட்டுவதாக கொள்வோம் . 

இந்த பெயர்கள் செல்வ வளத்துக்கு அதிபதியான லக்ஷ்மிதேவியின் பெயராகும். ஒரு பிறந்த பெண் குழந்தையின் ஜாதகத்தில் சுக போககாரன் - பொன் பொருள் - செல்வ வளத்துடன் கூடிய வாழ்க்கைக்கு காரகம் வகிக்கும் சுக்ரன் வலுவுடன் இருந்து மேலே சொன்ன பெயரை அந்த குழந்தைக்கு சூட்டினால் அந்த குழந்தையின் எதிர்க்காலம் செல்வ வளத்துக்கு குறைவில்லாமல் இருப்பதோடு அந்த குழந்தையின் குடும்பமும் பொருளாதார வளத்தில் ஏற்றம் காணும் .

 இன்னும் ஒரு படி மேலே போய் அந்த குழந்தையின் ஜாதகத்தில் தன ஸ்தானம் என்று சொல்லகூடிய லக்னத்துக்கு இரண்டாம் இடத்துக்கு அதிபதி செழுமையுடன் காணப்பட்டால் மேலே சொன்ன பெயர்களின் மூலம் அந்த குழந்தையின் குடும்பம் பொருளாதார விஷயத்தில் லாபமான பலனை அனுபவிக்கும் .

ஒரு ஆண் குழந்தைக்கு முருக கடவுளின் கடவுளின் பெயரான முருகன் - வேலன் - கார்த்திகேயன் - கார்த்திக் - வேல்முருகன் - வேலு - ஆறுமுகம் - போன்ற போன்ற பெயர்களை சூட்டினால் இந்த முருக கடவுளை அதி கடவுளாக கடவுளாக கொண்ட கிரகமான செவ்வாய் பகவான் அந்த குழந்தையின் ஜாதகத்தில் சிறப்பான இடத்தில் இருக்கும்பொழுது அந்த குழந்தையின் சகோதர சகோதரியின் உறவில் நல்ல பலன் . வீடுமனை மனை அமையும் யோகம்- போன்றவை அந்த குடும்பத்தில் மேம்படும் .

நீலகண்டன் - அருணாசலம் - பிரகதீஷ் - சிவராமன் - சிவசக்தி - ஈசுவரன் - ஜெகதீஸ்வரன் - சுந்தரம் - நடராஜன் - மகாதேவன் - போன்ற பெயர்களை ஒரு ஆண் குழந்தைக்கு சூட்டுவதாக கொள்வோம். இந்த பெயர்கள் அனைத்தும் சிவனுக்கு உரிய பெயர்கள் . இந்த சிவபெருமானை அதி கடவுளாக கொண்ட கிரகமான சூரியன் அந்த குழந்தையின் ஜாதகத்தில் வலிமையுடன் காணப்பட்டு அந்த பெயரை அந்த குழந்தைக்கு சூட்டும்போழுது அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து வகையிலும் பிரகாசமாக இருக்கும் . நல்ல ஆயுள் பலம் - அரசாங்க வழி ஆதாயம் - அரசு சம்பந்தப்பட்ட துறைகளால் அந்த குடும்பத்துக்கு ஆதாயம் - தகப்பன் வழி உறவு வகையில் மேன்மையான  பலன்கள் ஏற்படும் .

சரசுவதி - கலை வாணி - காயத்திரி - சாரதா - வாணி - பாரதி - என்ற ஒரு பெயரை ஒரு பெண் குழந்தைக்கு சூட்டுவதாக கொள்வோம் . இந்த பெயர்கள் சரஸ்வதி தேவியின் பெயர்களாகும் . அந்த பெண் குழந்தையின் ஜாதகத்தில் 2 - 4 - 9 - இடத்துக்கு அதிபதிகள் வலுவுடன் காணபட்டாலும் அல்லது புதன் நல்ல நிலைமையில் இருந்தாலும் - அந்த குழந்தை கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கி - உலகமே போற்றும் அளவுக்கு அந்த கல்வி செல்வம் மூலம் - தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் சிறந்த புகழையும் செல்வ வளத்தையும் அந்த குழந்தை பெற்று தரும் . 

ஆதலால் எந்த ஒரு குழந்தைக்கும் கடவுளின் பெயரை சூட்டுவது முக்கியமல்ல அந்த கடவுளுக்கு ஆதிபத்தியம் வகிக்கும் கிரகம் அந்த ஜாதகத்தில் வலிமையானதாக இருந்தால் அந்த குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  938437294

கருத்துரையிடுக

0 கருத்துகள்