Type Here to Get Search Results !

அஷ்டமச் சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

    ஓம் சிவ சக்தி

 

அஷ்டமத்து சனி நடைபெறும் காலங்களில் சரி - ஜெனமசனி நடக்கும் காலங்களிலும் சரி நிச்சயமாக திருமணம் செய்யகூடாது . திருமணத்தை தள்ளி போடுவது நல்லது . 

அதையும் மீறி திருமணம் செய்யும்பொழுது அந்த ஜாதகனுக்கோ அல்லது ஜாதககிக்கோ கண்டம்  ஏற்படலாம். அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை கூட ஏற்படலாம். அல்லது அவர்களின் திருமண வாழ்க்கையை பாதிக்ககூடிய கசப்பான சம்பவங்கள் நடந்தே தீரும். இது ஜோதிட அனுபவத்தில் கண்ட உண்மை .  

அதேபோல் கோச்சார கிரகங்கள் மோசமாக இருக்கும் போது திருமணம் செய்யக் கூடாது. ஏனென்றால் அந்த சமயங்களில் உடலுறவுக்கு மனமும், உடலும் ஏற்புடையதாக இருக்காது. 

அஷ்டமத்துச் சனி, ஜென்ம சனி காலங்களிலும் காமத்திற்கு உடல் ஒத்துழைக்காது. அதுபோன்ற காலங்களில் தம்பதியர் இடையே சிறு மனக்கசப்புகள் ஏற்படும். இதனைக் காரணமாகக் கொண்டுதான் முன்பு பேசிய நபர்களிடம் மீண்டும் நட்பை புதுப்பித்துக் கொண்டு புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள அவர்கள் (ஆண்/பெண்) முற்படுவர். 

இதனால் தவறான நடவடிக்கைகளில் இறங்க முற்படும் சூழ்நிலை அந்த ஜாதகனுக்கோ  அல்லது ஜாதகிக்கோ ஏற்படும்.  


அதனால் பல கோணங்களில் அலசி ஆராய்ந்து ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டும். அதேபோல் திருமணத் தேதியை தேர்வு செய்யும் போது மணப்பெண்ணுக்கு தாரா பலம் உள்ள நாளில் திருமணத் தேதியை அமைக்க வேண்டும். மாதவிடாய் நாட்கள் குறுக்கிடவே கூடாது.

இதுபோன்ற காலங்களில் திருமணம் செய்வது துர்மரணத்தை கொடுக்கும். மேலும் மனைவிக்கு மாதவிடாய் உள்ள காலத்தில் கிரகப் பிரவேசம் செய்தால் அந்த வீடே உருப்படாது. 

எனவே, ஜோதிடத்தின், திருமணப் பொருத்தத்தின் உள்விதிகளை அறிந்து, நடைமுறையில் பயன்படுத்தி ஜோதிடர்களிடம் ஜாதகத்தைக் கொடுத்து பொருத்தம் பார்த்து, திருமணத் தேதியை குறித்து மணம் செய்தால் அந்த தம்பதியர் இறுதி வரை மகிழ்ச்சியுடன் வாழலாம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

கருத்துரையிடுக

0 கருத்துகள்