இத்தலத்தின் பெருமை :
கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காமல் விநாயகருக்கு கிடைத்துவிடுகிறது . இதனால் கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்துவிடுகிறார் . முருகனை தேடி கொண்டு சிவனும் பார்வதியும் பூலோகத்தில் பழனி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள் . 'அப்படி இறங்கிய இடத்தில இயற்கை எழிலை கண்ட சிவபெருமான் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார் .
ஆனால் பார்வதி தேவியோ தன் மகன் முருகனை காண பழனிக்கே செல்ல அனுமதிக்கும்படி சிவனிடம் வேண்ட சிவனும் அனுமதிக்கிறார் . பிரிய மனமில்லாமல் நாயகி விடை பெற்றதால் அன்னை பிரியா நாயகி என்றும் விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடைகொடுத்ததால் பிரியாவிடை என்றும் அழைக்கப்பட்டார்கள் . இதுவே காலப்போக்கில் மருவி பெரியாவுடையார் பெரியநாயகி ஆனது .
பார்வதி முருகனை தேடி சென்றுவிட்டதால் இங்கு அம்மனுக்கு என தனி சன்னதி கிடையாது . இருந்தாலும் சக்தி வேறு சிவன் வேறு என இல்லாமல் இரண்டும் ஒன்றானதால் இங்குள்ள சிவனை வழிபட்டாலே சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும் .
கோயிலின் சிறப்பம்சம் :
இக்கோயிலின் சிறப்பம்சம் கோயில் மேற்கு பார்த்து அமைந்திருப்பதும் சிவனின் பீடம் சதுரமாக அமைந்திருப்பதும் ஆகும் .
மும்மூர்த்தியும் தலமும் இங்கு சிறப்பு . அதேபோல் தீர்த்தமும் இங்கு சிறப்பு . வடக்கு நோக்கி ஓடும் சண்முகா நதி இங்கு மிகவும் சிறப்பாகும் . இந்நதியில் குளித்து சிவனை வழிபட்டால் ஏழேழு ஜென்ம பாவமும் விலகும் என புராணம் கூறுகிறது .
பழனி முருகனை தரிசிக்க வருபவர்கள் முருகனை தரிசிக்கும் முன் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனை தேடி வந்த தந்தையான பெரியாவுடையாரை தரிசனம் செய்த பின் பழனி முருகனை தரிசனம் செய்தால்தான் முழு பலனும் கிடைக்கும் என கூறுகின்றார்கள் . கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள பரிவார மூர்த்திகளும் பிரதோஷ நாயனாரும் ஆகும் . புதுவாக பிரதோஷ மூர்த்தி நான்கு கைகளுடன் அம்பாளுடன் நின்ற நிலையில் இருக்கும் . ஆனால் இங்குள்ள பிரதோஷ மூர்த்தி தாண்டவ நிலையில் ஒரு காலை தூக்கி கையில் டமருத்துடன் காணப்படுகிறார் .
இங்குள்ள நடராஜரும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் . எப்படி என்றால் உடல் முழுக்க கருப்பு வண்ணமும் முகம் மட்டும் வெள்ளை வண்ணம் கொண்ட கல்லால் ஆன நடராஜர் . அருகில் சிவகாமி அம்மனும் கிடையாது . இங்குள்ள இறைவனை சுற்றி கோஷ்ட தேவதைகளாக பிரம்மா விஷ்ணு ருத்திரன் அமைந்திருப்பதும் கோயில் சிறப்பு அம்சமாகும் .
மேலும் தட்சணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக இங்கு அருள்பாலித்து வருகிறார் .
தல வரலாறு :
வீராட மகாராஜாவுக்கு வேட்டை ஆடுவது என்றால் மிகவும் விருப்பம் ஒரு நாள் சிவன் மான் உருவம் கொண்டு மன்னன் முன்பு தோன்றினார் . மானின் அழகில் மயங்கிய மன்னன் அதை பிடிக்க துரத்தினான் . மானும் மன்னனின் பிடியால் சிக்காமல் லிங்க வடிவில் வீற்றிருக்கும் புற்று மறைவில் வந்து மறைந்துகொண்டது . மானை காணாததால் கோபம் கொண்ட மன்னன் வில்லில் அம்பேற்றி புற்றில் செலுத்தினான் . அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது . அம்பு செலுத்திய புற்றிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது . பயந்து போன மன்னன் புதரை விலக்கி பார்த்தபொழுது அம்பு புதருக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டு ரத்தம் வழிந்தது .
இறைவனிடம் மண்டியிட்டு அறியாமல் செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் மன்னன் . இறைவனும் அசரீரியாக தன்னை வெளிப்படுத்தவே இந்த திருவிளையாடல் புரிந்தோம் என்று கூறினார் .
இறைவனின் கட்டளை படியே மன்னனும் அந்த இடத்தில் கற்பக கிரகம் அமைத்து பூஜை செய்து வந்தான் . மன்னன் மானை துரத்தி வந்ததால் இந்த இடம் மானூர் ஆனது .
பிரார்த்தனை :
மேற்கு பார்த்த சிவாயாலயம் மிகவும் சக்தி வாய்ந்தவர் . அனுகிரக மூர்த்தி எந்த வித பிரச்சனைகளில் இருந்தும் காப்பாற்றக்கூடியவர் . இத்தல இறைவனை வழிபட்டால் நல்ல வேலை . குழந்தை பாக்கியம் குழந்தை பேரு பித்ரு சாபம் நீங்குதல் எதிரிகள் தொல்லை நீங்குதல் தன்னம்பிக்கை மனத்தெளிவு கிடைக்கும் .
நேர்த்தி கடன் :
இங்கு வந்து வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் .
தல சிறப்பு :
லிங்கத்தின் அம்பு பட்ட தழும்பு இன்று அபிஷேகத்தின் பொது காணலாம் .
திருவிழா :
ஆடி 18 இந்நாளில் அம்மன் பெரியநாயகி இங்கு எழுந்தருளி சேர்த்திருப்பதாக ஐதீகம் இந்த நாளில் பெண்கள் இங்கு தாலி சரடு மாற்றுவார்கள் . ஆடி அமாவாசை மஹா சிவராத்திரி மாத பிரதோஷம் தமிழ் வருடப்பிறப்பு ஆனிமாத ஜேஷ்டாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் சங்காபிஷேகம் தனுர்மாத பூஜை கார்த்திகை சம்வர்த சராபிஷேகம் தைஅமாவாசை ஆகியவை இங்கு முக்கிய திருவிழாக்கள் ஆகும் .
குறிப்பு :
வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்ய விரும்பினால் அவர்கள் விருப்பப்பட்டால் அவர்களின் பெயர் பிறந்த தேதி - பிறந்த நேரம் - பிறந்த இடம் - இவைகளை தெரிவித்தால் அவர்களின் பெயரில் நம்பிக்கையுடன் சிறப்பு பரிகார பூஜை செய்யபடும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com

