Type Here to Get Search Results !

உத்தியோகம் கிடைக்க சென்று வணங்கவேண்டிய பரிகார கோயில் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

  

படித்த படிப்பிற்ற்கு நிரந்தரமான வேலை கௌரவமான வேலை கிடைப்பதற்கு சென்று வணங்கவேண்டிய திருக்கோயில் இந்தியாவில் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் மானூர் என்ற இடத்தில்  வீற்றிருக்கும் பெரியாவுடையார் திருக்கோயில் ஆகும் . 

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெரியாவுடையார் (பிரகதீஸ்வரரை ) வழிபட்டால் படித்த படிப்பிற்கு நல்ல வேலை - உத்தியோக உயர்வு - போன்றவை கிடைக்கும் .

இத்தலத்தின் பெருமை :

கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காமல் விநாயகருக்கு கிடைத்துவிடுகிறது . இதனால் கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்துவிடுகிறார் . முருகனை தேடி கொண்டு சிவனும் பார்வதியும் பூலோகத்தில் பழனி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள் . 'அப்படி இறங்கிய இடத்தில இயற்கை எழிலை கண்ட சிவபெருமான் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார் . 

ஆனால் பார்வதி தேவியோ தன் மகன் முருகனை காண பழனிக்கே செல்ல அனுமதிக்கும்படி சிவனிடம் வேண்ட சிவனும் அனுமதிக்கிறார் .  பிரிய மனமில்லாமல் நாயகி விடை பெற்றதால் அன்னை பிரியா நாயகி என்றும் விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடைகொடுத்ததால் பிரியாவிடை என்றும் அழைக்கப்பட்டார்கள் .  இதுவே காலப்போக்கில் மருவி பெரியாவுடையார் பெரியநாயகி ஆனது . 


பார்வதி முருகனை தேடி சென்றுவிட்டதால் இங்கு அம்மனுக்கு என தனி சன்னதி கிடையாது . இருந்தாலும் சக்தி வேறு சிவன் வேறு என இல்லாமல் இரண்டும் ஒன்றானதால் இங்குள்ள சிவனை வழிபட்டாலே சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும் . 


கோயிலின் சிறப்பம்சம் :

இக்கோயிலின் சிறப்பம்சம் கோயில் மேற்கு பார்த்து அமைந்திருப்பதும் சிவனின் பீடம் சதுரமாக அமைந்திருப்பதும் ஆகும் . 


மும்மூர்த்தியும் தலமும் இங்கு சிறப்பு . அதேபோல் தீர்த்தமும் இங்கு சிறப்பு . வடக்கு நோக்கி ஓடும் சண்முகா நதி இங்கு மிகவும் சிறப்பாகும் . இந்நதியில் குளித்து சிவனை வழிபட்டால் ஏழேழு ஜென்ம பாவமும் விலகும் என புராணம் கூறுகிறது . 


பழனி முருகனை தரிசிக்க வருபவர்கள் முருகனை தரிசிக்கும் முன்  இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனை தேடி வந்த தந்தையான பெரியாவுடையாரை தரிசனம் செய்த பின் பழனி முருகனை தரிசனம் செய்தால்தான் முழு பலனும் கிடைக்கும் என கூறுகின்றார்கள் .  கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள பரிவார மூர்த்திகளும் பிரதோஷ நாயனாரும் ஆகும் . புதுவாக பிரதோஷ மூர்த்தி நான்கு கைகளுடன் அம்பாளுடன் நின்ற நிலையில் இருக்கும் . ஆனால் இங்குள்ள பிரதோஷ மூர்த்தி தாண்டவ நிலையில் ஒரு காலை தூக்கி கையில் டமருத்துடன் காணப்படுகிறார் . 


இங்குள்ள நடராஜரும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் . எப்படி என்றால் உடல் முழுக்க கருப்பு வண்ணமும் முகம் மட்டும் வெள்ளை வண்ணம் கொண்ட கல்லால் ஆன நடராஜர் . அருகில் சிவகாமி அம்மனும் கிடையாது . இங்குள்ள இறைவனை சுற்றி கோஷ்ட தேவதைகளாக  பிரம்மா விஷ்ணு ருத்திரன் அமைந்திருப்பதும் கோயில் சிறப்பு அம்சமாகும் . 


மேலும் தட்சணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக இங்கு அருள்பாலித்து  வருகிறார் . 


தல வரலாறு :

வீராட மகாராஜாவுக்கு வேட்டை  ஆடுவது என்றால் மிகவும் விருப்பம் ஒரு நாள் சிவன் மான் உருவம் கொண்டு  மன்னன் முன்பு தோன்றினார் . மானின் அழகில் மயங்கிய மன்னன் அதை பிடிக்க துரத்தினான் . மானும் மன்னனின் பிடியால் சிக்காமல் லிங்க வடிவில் வீற்றிருக்கும் புற்று  மறைவில் வந்து மறைந்துகொண்டது . மானை காணாததால் கோபம் கொண்ட மன்னன் வில்லில் அம்பேற்றி புற்றில் செலுத்தினான் . அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது . அம்பு செலுத்திய புற்றிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது . பயந்து போன மன்னன் புதரை விலக்கி பார்த்தபொழுது அம்பு புதருக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டு ரத்தம் வழிந்தது .


இறைவனிடம் மண்டியிட்டு அறியாமல் செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் மன்னன் . இறைவனும் அசரீரியாக தன்னை வெளிப்படுத்தவே இந்த திருவிளையாடல் புரிந்தோம் என்று கூறினார் . 


இறைவனின் கட்டளை படியே மன்னனும் அந்த இடத்தில் கற்பக கிரகம் அமைத்து பூஜை செய்து வந்தான் . மன்னன் மானை துரத்தி வந்ததால் இந்த இடம் மானூர் ஆனது . 


பிரார்த்தனை :

மேற்கு பார்த்த சிவாயாலயம் மிகவும் சக்தி வாய்ந்தவர் . அனுகிரக மூர்த்தி எந்த வித பிரச்சனைகளில் இருந்தும் காப்பாற்றக்கூடியவர் . இத்தல இறைவனை வழிபட்டால் நல்ல வேலை . குழந்தை பாக்கியம் குழந்தை பேரு பித்ரு சாபம் நீங்குதல் எதிரிகள் தொல்லை நீங்குதல் தன்னம்பிக்கை மனத்தெளிவு கிடைக்கும் . 


நேர்த்தி கடன் :


இங்கு வந்து வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் . 


தல சிறப்பு :

லிங்கத்தின் அம்பு பட்ட தழும்பு இன்று அபிஷேகத்தின் பொது காணலாம் . 


திருவிழா :


ஆடி 18 இந்நாளில் அம்மன் பெரியநாயகி இங்கு எழுந்தருளி சேர்த்திருப்பதாக ஐதீகம் இந்த நாளில் பெண்கள் இங்கு தாலி சரடு மாற்றுவார்கள் . ஆடி அமாவாசை மஹா சிவராத்திரி மாத பிரதோஷம் தமிழ் வருடப்பிறப்பு ஆனிமாத ஜேஷ்டாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் சங்காபிஷேகம் தனுர்மாத பூஜை கார்த்திகை சம்வர்த சராபிஷேகம் தைஅமாவாசை ஆகியவை இங்கு முக்கிய திருவிழாக்கள் ஆகும் . 


குறிப்பு :


வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்ய விரும்பினால் அவர்கள் விருப்பப்பட்டால்  அவர்களின் பெயர் பிறந்த தேதி - பிறந்த நேரம் - பிறந்த இடம் - இவைகளை தெரிவித்தால் அவர்களின் பெயரில் நம்பிக்கையுடன் சிறப்பு பரிகார பூஜை செய்யபடும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துரையிடுக

0 கருத்துகள்